அர­சாங்­கத்தின் அடுத்தகட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­பதி நாளை விசேட அறிவிப்பு!

334 0

அர­சாங்­கத்தின் அடுத்தகட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட அறி­விப்பு ஒன்­றினை நாளை  விடுக்­க­வுள்ளார். ஜனா­தி­பதி மாளி­கையில் நாளை  ஊடக பிர­தா­னி­களை சந்­திக்­க­வுள்ள  நிலையில் இவ் அறி­விப்­பினை வெளி­யி­டுவார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

நடை­பெற்று முடிந்த உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­தலின் பினனர் அர­சாங்­கத்தில் பல நெருக்­கடி நிலை­மைகள் எழுந்­துள்­ளன. தேசிய அர­சாங்­கத்தின்  பிர­தான இரண்டு கட்­சிகள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் மற்றும் புரிந்­து­ணர்­வுகள் என்­ப­வற்றின் மத்­தியில் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஊடக பிர­தா­னி­களை சந்­திக்­கின்றார். நாளை காலை 8.30 மணிக்கு ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெறும் இந்த சந்­திப்பின் போது அவர் விசேட கார­ணிகள் குறித்து கூறுவார் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய அர­சாங்­க­மாக தாம் இணைந்து பய­ணிப்­பது   அல்­லது தனி கட்­சி­யாக செயற்­ப­டு­வது  என்ற நிலைப்­பாட்டை எட்டும் வகையில் பிர­தான இரண்டு கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகி­யன ஆலோ­சித்து வரு­கின்­றன. இந்­நி­லையில் ஜனா­தி­பதி தமை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு பொது எதி­ரணி உறுப்­பி­னர்­களை சந்­தித்து முக்­கிய கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இந்த கலந்­து­ரை­யாடல் ஜனா­தி­பதி இல்­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சியும் கூட்­டணி அமைத்து ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யாக பய­ணிப்­பது குறித்தும் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றனர். இவ்­வா­றான நிலை­யி­லேயே ஜனா­தி­பதி சில முக்­கிய தீர்­மா­னங்­களை வெளிப்­ப­டுத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின்  தலை­மையில் அர­சியல் கட்­சிகள் மற்றும் கூட்­ட­ணியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற அபேட்­ச­கர்கள்  சந்­திப்­பொன்று  இன்று கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெ­று­கின்­றது. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்து அபேட்சகர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்மையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment