கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடிம் ஒன்று இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி(காணொளி)

3165 0

கொழும்பு – கிரான்ட்பாஸ் பபாபுள்ளே மாவத்தை பிரதேசத்தில், பழைய கட்டடிம் ஒன்று இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
தேயிலை களஞ்சியசாலை கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து விழுந்துள்ள நிலையில், அதில் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு பணியாளர்கள் சென்று துரித நடவடிக்கையினை மேற்கொண்டதாக, எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த களஞ்சியசாலையில் 12 ஊழியர்கள் தொழில் புரிந்து வரும் நிலையில், 3 ஊழியர்கள் கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்னர் கட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில், ஏனைய 9 பேரும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment