சட்டவிரோத சிக்கரெட்டுக்களுடன் இரு பெண்கள் கைது

359 0

சட்டவிரோதமான முறையில் சிக்கரெட்டுக்களை இந்நாட்டுக்கு கொண்டுவந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாய் நாட்டிலிருந்து இன்று அதிகாலை வருகை தந்த இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து 41,040 சிக்கரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மீரிகம, வரக்காபொல பிரதேசங்களை சேர்ந்த 40, 31 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment