பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மறியல் – ஜி.ராமகிருஷ்ணன் கைது

246 0

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 12-ம் தேதி கோட்டை நோக்கிபேரணி நடத்தப்படும் என்றும் முக்கிய நகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூட்டாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இடதுசாரி கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்ககான தொண்டர்கள் அணிவகுத்து கோட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

கோட்டை நோக்கி வந்தவர்களை போலீசார் பாரிமுனையில் தடுத்து நிறுத்தினர். இதனால், அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

Leave a comment