ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அவசர கூட்டமொன்றுக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்த்த அளவு வெற்றியைக் கைப்பற்ற முடியாமல் போயுள்ளதை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.