13-ந்தேதி கண்டன பொதுக்கூட்டம்: வைகோ மதுரையில் பங்கேற்பு

423 0

பஸ் கட்டண உயர்வை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் 13-ந்தேதி தமிழகம் முழுவதும் நடத்தும் கண்டன பொதுக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ மதுரையில் பங்கேற்கிறார்.

பஸ் கட்டண உயர்வை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் 13-ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன பொதுக் கூட்டங்களை நடத்துகிறார்கள்.

இந்த கூட்டங்களில் பங்கேற்பவர்களின் விவரங்களை இன்று ம.தி.மு.க. தலைமை நிலையம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மதுரை – ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ.

திருப்பூர் – அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, ஈரோடு – பொருளாளர் கணேசமூர்த்தி, தூத்துக்குடி – துணை பொதுச்செயலாளர் – நாசரேத் துரை.

சென்னை – திருவள்ளூர்

தென்சென்னை – துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, திருவள்ளூர் – உயர் நிலை உறுப்பினர் செங்குட்டுவன்.

வடசென்னை – தீர்மானக்குழு செயலாளர் வக்கீல் ஆவடி அந்திரிதாஸ், காஞ்சீபுரம் – இலக்கிய அணி மாநில துணை செயலாளர் காரை செல்வராஜ் ஆகியோர் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment