கடற்­படையின் குற்றத்தை குறைக்க பொலி­ஸார் முயற்சி!

239 0

புங்­கு­டு­தீ­வில் கடற்­படை வாக­னம் மோதி சிறுமி உயி­ரி­ழந்த வழக்­கில், சிறு­மி­யின் மாம­னா­ரை­யும் பொலி­ஸார் கொலை வழக்­கில் இணைத்­துள்­ள­னர். சிறு­மிக்­குத் தலைக்­க­வ­சம் அணி­யாது மோட்­டார் சைக்­கி­ளில் ஏற்­றிச் சென்­றார் என்­பதே பொலி­ஸா­ரின் குற்­றச்­சாட்டு.

புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­ல­யத்துக்கு அரு­கில் கடந்த மாதம் 24ஆம் திகதி ஏற்­பட்ட விபத்­தில் புங்­கு­டு­தீவு ரோமன் கத்­தோ­லிக்க பாட­சா­லை­யில் கல்வி கற்ற மாணவி உயி­ரி­ழந்­தி­ருந்­தார். இந்த வழக்கு ஊர்­கா­வற்­துறை நீதி­மன்­றில் நீதி­வான் ஏ.எம்.எம்.றியாழ் முன்­னி­லை­யில் நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது.

அதன்­போது மாண­வி­யைப் பாட­சா­லைக்கு மோட்­டார் சைக்­கி­ளில் ஏற்றி சென்ற மாண­வி­யின் மாம­னா­ரை­யும் பொலி­ஸார் கைது செய்து வழக்­கில் சந்­தேக நப­ராக இணைத்­தி­ருந்­த­னர்.

விசா­ர­ணை­யின் போது நீதி­வானால் , ‘‘குற்­றத்­திற்கு உடந்தை அளித்­த­வர்­களை , அந்த குற்­றத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று சந்­தேக நபர்­க­ளாக வழக்­கில் இணைக்­க­லாம். ஆனால் மாம­னாரை எந்த அடிப்­ப­டை­யில் வழக்­கில் இணைக்கப்பட்­டார்’’ என்று கேட்­கப்­பட்­டது.

மாண­விக்கு தலைக்­க­வ­சம் அணி­யாது , மோட்­டார்­சைக்­கி­ளில் ஏற்­றிச் சென்­ற­மை­யால் வழக்­கில் இணைத்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

“தலைக்­க­வ­சம் அணி­யாது அழைத்து சென்­றமை தனி வழக்­காக பதிவு செய்­யப்­பட வேண்­டுமே தவிர விபத்து வழக்­கில் விபத்தை ஏற்­ப­டுத்தி உயி­ரி­ழப்பை விளை­வித்த குற்­ற­சாட்­டில் சந்­தேக நபர்­க­ளில் ஒரு­வ­ராக அவரை இணைக்க முடி­யாது” என்று நீதி­வான் பொலி­ஸா­ருக்­குக் கண்­டிப்­பு­டன் அறி­வு­றுத்­த­லை­யும் வழங்­கி­னார்.

Leave a comment