கம்மன்பிலவுக்கு எதிராக சாட்சியமளிக்க அவுஸ்திரேலிய பிரஜை தயார்

495 0

Untitledதான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு வந்து சிறையில் உள்ளஉதய கம்மன்பிலவுக்கு எதிராக சாட்சியம் அளிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய வர்த்தகரானபிரையன் ப்ரடிக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியாவில் இருந்தவாறே இணையம் ஊடாக ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது கைதானது எவ்வகையிலும் அரசியல் பழிவாங்கல் இல்லைஎன்றும், உண்மையாகவே நிதி மோசடியில் உதய கம்மன்பில ஈடுபட்டுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிட்னி ஜயசிங்க இலங்கையர்கள் மூலம்தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும், தான் இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்ற போது இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment