தமிழை நாம் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு எடுத்­துச்­செல்ல வேண்­டும்!

424 0

தமிழை நாம் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு எடுத்­துச்­செல்ல வேண்­டும். தமிழை வாழும் மொழி­யாக வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்­றால் அதன் பெரு­மையை, அரு­மையை அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு நாம் எடுத்­து­ரைக்க வேண்­டும்.

தமிழ் மொழி­யின் அருமை பெரு­மையை நம் இளை­ய­வர்­கள் உணர்ந்­தால்­தான் அந்த மொழியை அவர்­கள் பயன்­ப­டுத்­து­வார்­கள், தக்­க­வைத்­துக்­கொள்­வார்­கள். வளர்க்­கப் பாடு­ப­டு­வார்­கள். அப்­பொ­ழு­து­தான் தமிழ் மொழி அடுத்த நிலைக்­குச் செல்லும். இதைச்­செய்­தால் தமிழ் இன்­னும் வாழும் மொழி­யா­கவே இருக்­கும்.

நாம், நாடு என்­றும் மதம் என்­றும் சாதி என்­றும் பிர­தே­சம் என்­றும் பிரிந்து நில்­லா­மல் ‘தமி­ழன்’ என்று ஒன்­று­சேர்ந்து நிற்க வேண்­டும். நமது தாய்க்கு நிக­ரான தாய்­மொ­ழி­யைக் காக்­கப் பாடு­ப­ட­வேண்­டும் என்­றார் அருட்­திரு. தமிழ் நேசன் அடி­க­ளார்.

உல­கத் தமிழ்ப் பண்­பாட்டு இயக்­கம் நடத்­திய கலை இலக்­கி­யப் பண்­பாட்­டுப் பெரு­விழா யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு சிறப்­புரை ஆற்­றும் போதே இவ்­வாறு குறிப்­பிட்­டார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மொழி என்­பது ஆன்மா பய­ணிக்­கும் பாதை. ஒரு தலை­முறை அடுத்த தலை­மு­றைக்கு தன் பண்­பாட்டை எடுத்­துச்­செல்­லும் வழி. தமி­ழர்­க­ளா­கிய நம்­மைப் பொறுத்­த­வரை தமிழ் மொழி என்­பது வெறும் ‘வழி’ மட்­டு­மல்ல அது­தான் நமது ‘விழி.’ தமிழ் என்­பது வெறு­மனே நமது பேச்சு அல்ல அது­தான் நமது மூச்சு.! தமிழ் வாழும் மொழி. இன்று உல­கத்­தில் ஏறக்­கு­றைய 6000 மொழி­கள் உள்­ளன.

இவற்­றிலே ஆறு மொழி­கள்­தான் இது­வரை செம்­மொ­ழித் தகு­தி­யைக் கொண்ட மொழி­க­ளாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. கிரேக்­கம், இலத்­தீன், எபி­ரே­யம், சமஸ்­கி­ரு­தம், சீனம், தமிழ் ஆகி­ய­வையே அவையாகும்.

இந்­தச் செம்­மொ­ழி­க­ளிலே சீன­மொ­ழி­ யை­யும் தமிழ் மொழி­யை­யும் தவிர ஏனை­யவை இறந்­து­விட்­டன அல்­லது உரு­மாறி விட்­டன. இலத்­தின் மற்­றும் சமஸ்­கி­ருத மொழி­கள் இன்று வழக்­கொ­ழிந்­து­விட்­டன.

தமிழ் ஒரு தொன்­மை­யான மொழி மட்­டு­மல்ல, அது இன்­று­வரை தொடர்ந்து வாழு­கின்ற மொழி! தமிழ் மொழி காலத்தை வென்று நிற்­கின்­றது, காலம் கடந்­தும் நிற்­கின்­றது. தமி­ழின் சிறப்­பைச் சிலா­கித்­துக் கூறும் பல்­வேறு அடை­மொ­ழி­க­ளுள் ஒன்று ‘கன்­னித் தமிழ்’ என்­ப­தா­கும்.

தமிழ் மொழி­யின் இந்­நெ­டிய வாழ்­வுக்கு, தமிழ் மொழி­யின் இள­மைக்கு காய­கல்­ப­மாய் விளங்­கு­வ­தற்கு காலத்­துக்கு ஏற்­ற­வாறு தமிழ் தன்­னைத் தொடர்ந்து மாற்­றிக்­கொண்டு வரு­வ­தே­யா­கும்.

பார­தி­யார் சில கன­வு­கள் கண்­டார். தமிழ் மொழி­யைக் குறித்து அவர் கனவு கண்­டார். ‘தேம­து­ரத் தமி­ழோசை உல­க­மெ­லாம் பர­வும்­வகை செய்­தல் வேண்­டும்’ என்­பது தமிழ் மொழி­கு­றித்த பார­தி­யின் கனவு.

பார­தி­யின் கன­வு­களை நன­வாக்­கி­ய­வர் நம் ஈழம் பெற்­றெ­டுத்த தமிழ் அறி­ஞர் தமிழ்த்­தூது தனி­நா­ய­கம் அடி­க­ளார். பார­தி­யின் வார்த்­தைக்கு செயல் வடி­வம் கொடுத்­த­வர் தனி­நா­ய­கம் அடி­க­ளார்.

தமி­ழர்­கள் தமக்­குள்­ளேயே பழம்­பெ­ருமை பேசிக்­கொண்­டி­ருந்த வேளை­யில் புல­வர்­க­ ளுக்­குள்­ளும் பண்­டி­தர்­க­ளுக்­குள்­ளும் தமிழ் மொழி முடங்­கிக் கிடந்­த­நி­லை­யில் தனி­நா­யக அடி­க­ளார் அதனை உலக அரங்­கில் ஏற்­றி­வைத்­தார்!

முதல் முத­லில் 1966ஆம் ஆண்டு மலே­சி­யா­வில் உள்ள கோலா­லம்­பூர் நக­ரில் முதல் உல­கத் தமி­ழா­ராய்ச்சி மாநாட்டை அடி­க­ளார் கூட்­டி­னார். இவ­ரு­டைய முயற்­சி­ யால்­தான் உல­கின் பல்­வேறு நாடு­க­ளில் உல­கத் தமி­ழா­ராய்ச்சி மாநா­டு­கள் தொடர்ந்து நடை­பெறுகின்றன.

தமி­ழைப்­பற்றி தமி­ழர் அல்­லா­த­வர்­க­ளும் ஆய்வு செய்­யும் நிலையை இந்த மாநா­டு­கள் மூலம் அடி­க­ளார் தோற்­று­வித்­தார். ‘தமிழ்ப் பண்­பாடு’ என்ற பெய­ரில் ஆங்­கில மொழி­யில் ஒரு முத்­திங்­கள் ஏட்டை வெளி­யிட்­டார். இதன்­மூ­லம் தமிழ் அறி­ஞர்­க­ளும் தமி­ழ­ரல்­லாத வேற்­று­மொழி அறி­ஞர்­க­ளும் தமிழ் மொழி தொடர்­பான ஆராய்ச்சி முடி­வு­களை வெளிக்­கொ­ணர வழி­கோ­லி­னார்.

தமி­ழின் தூது­வ­ராக அவர் பல்­வேறு நாடு­க­ளுக்­கும் பய­ணம் செய்து உல­கப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் தமிழ் மொழி­யின் தொன்­மையை, மேன்­மையை அதன் செழு­மை­யான இலக்­கிய வளத்தை பிற­நாட்­ட­வர்­க­ளுக்கு எடுத்து விளக்­கி­னார். அத­னால்­தான் அவரை ‘தமிழ்த்­தூது’ என்று தமிழ் உல­கம் கொண்­டா­டு­கின்­றது. ஆக, அவர் நடத்­திய உல­கத் தமி­ழா­ராய்ச்சி மாநா­டு­கள் ஆவர்.

நிறு­விய உல­கத் தமி­ழா­ராய்ச்சி மன்­றம் அவர் வெளி­யிட்ட முத்­திங்­கள் ஏடு அவர் உல­கப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் தமிழ் மொழி­பற்றி வழங்­கிய சொற்­பொ­ழி­வு­கள் ஆகிய இவற்­றின் மூலம் தமி­ழின் சிறப்பை சீர்­மையை உல­கம் ஏற்­றுக்­கொண்டு அங்­கீ­க­ரித்­தது. செம்­மொழி என்ற அந்­தஸ்தை நமது தமிழ் மொழி பெறு­வ­தற்கு தனி­நா­ய­கம் அடி­க­ளார் மேற்­கொண்ட முயற்­சி­கள் காத்­தி­ர­மா­ன­வை­யா­கும்.

தமி­ழ­னுக்கு அடிக்­கடி தன் தாய்­மொ­ழி­யின் மேன்­மையை தமிழ்க் கலை இலக்­கி­யங்­க­ளின் பெரு­மையை நினை­வு­ப­டுத்­த ­வேண்டி இருக்­கி­றது. அதற்­காக இது­போன்ற தமிழ் விழாக்­களை நாம் அடிக்­கடி ஒழுங்­கு­ப­டுத்­த­வேண்­டும். மொழி உணர்வை, இன உணர்வை, பண்­பாட்டு உணர்வை இது­போன்ற விழாக்­கள் நமக்கு ஊட்ட வேண்­டும்  என்­றார்.

Leave a comment