இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் மூவர் கைது

248 0

இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை அனுமதிப்பத்திரமின்றி தம்வசம் வைத்திருந்த மூவர் சேருநுவர மஹவெளி காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் துப்பாக்கிற்காக பயன்படுத்திய குண்டுகள் சிலவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment