உதயங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதில் சட்டரீதியிலான சிக்கல்

267 0

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர், உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதில் சட்டரீதியிலான சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் டுபாய் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் காரணமாக உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதில் மேலும் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயங்க வீரத்துங்க அமெரிக்காவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது நேற்றைய தினம் டுபாய் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment