மகளுக்கு கன்னியாதானம் செய்த தாய் – வைரலாகும் புகைப்படம்

241 0

சென்னையைச் சேர்ந்த ராஜேஸ்வரி தனது மகளுக்கு கன்னியாதானம் செய்து வைத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னையைச் சேர்ந்த ராஜேஸ்வரி ஷர்மா தனது 21 வயதில் கணவருடன் ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். 17 ஆண்டு திருமண உறவிற்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதனால் ராஜேஸ்வரி தனது மகளுடன் தனியாக வாழ்ந்தார். இந்நிலையில் ராஜேஸ்வரியின் மகள் சந்தியா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாம் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

இருவருக்கும் சென்னையில் தமிழ் பிராமண முறைப்படி திருமணம் நடந்தது. சந்தியாவின் தந்தை அவர்களுடன் இல்லாததால் அவருக்கு பதிலாக ராஜேஸ்வரி கன்னியாதானம் செய்தார். ராஜேஸ்வரி மடியில் சந்தியா உட்காந்திருக்க, சாம் தாலி கட்டினார்.

தந்தை ஸ்தானத்தில் இருந்து தாய் கன்னியாதானம் செய்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a comment