யானை தாக்கிய ரஜமகா விகாரையின் விகாராதிபதி உயிரிழந்தார்

232 0

யானை தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் உயிரிழந்துள்ளார். 

தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று விகாரையில் வைத்து யானைக்கு உணவு கொடுக்க முற்பட்டபோது தாக்குதலுக்குள்ளான விகாராதிபதி, களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டார்.

நேற்று (02) காலை மியன் குமரா என்ற யானைக் குட்டியெ பெல்லன்வில விமலரத்ன தேரர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

Leave a comment