மைத்திரி-ரணில் தேர்தலின் பின்னர் பழைய காதலர்கள் – மஹிந்த

237 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களை ஏமாற்றுவதற்கு நாடகமாடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தலின் பின்னர் பழைய காதலர்கள் போன்று மீண்டும் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்று சேர்வார்கள் என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ள கருத்து இதற்கு சிறந்த சான்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை அரசாங்கம் அமைக்க வருமாறு விடுத்த ஜனாதிபதியின் அழைப்பு இந்த அரசியல் நாடகத்தின் ஒரு பகுதியாகும். எமது வாக்குகளை உடைப்பதற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்குகளை அதிகரிக்கச் செய்வதற்கும் எடுக்கும் நடவடிக்கையே இதுவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பலாங்கொடயில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment