மண் சரிவு அபாயம் 107 பேர் இடம்பெயர்வு

231 0

ராகல பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வௌியெற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகல, லிடெல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களிலுள்ள 107 பேர் இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதுதவிர காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ருக்சைட், செனரத்புரா, ஹால்கன்ஓய பிரதேசங்களைச் சேர்ந்த 41 குடும்பங்களில் உள்ள சுமார் 200 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் தற்போது ஹால்கன்ஓய தமிழ் மகா வித்தியாலயம் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment