முல்லைத்தீவுக் கடலில் நண்பர்களுடன் சேர்ந்து கடலில் நீராடிய இளைஞனொருவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்றுஞாயிற்றுக்கிழமை(28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் குளித்துள்ளார்கள்.இதன்போது, கடலலை இழுத்துச் சென்ற நிலையில் உதயநகர் கிழக்கு கிளிநொச்சியினைச் சேர்ந்த ஜெயசங்கர் மயூரன்(வயது-27) என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுத் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.கடலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அத்தனையும் மீறி கடலில் நீராடியாமையினாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

