வயலில் கண்டெடுக்கப்பட்ட விவசாயின் சடலம்

351 0
திருகோணமலை, அத்தாபெந்திவெவ, பெனிக்கிட்டியாவ வயல் பகுதியில் விவசாயியொருவரின் சடலமொன்று இன்று (28) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் ரொட்டவெவ, அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அவ்சதஹாமிகே சுகத் பிரதீப் குமார (45வயது) என தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

சனிக்கிழமை இரவு பெனிக்கிட்டியாவ வயலுக்கு காவலுக்காக சென்ற போது வயலை பாதுகாப்பதற்காக யானை மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வேலியில் சிக்குண்ட நிலையில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment