தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி அரசியலை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை-கஜேந்திரகுமார்(காணொளி)

558 0

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி அரசியலை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை எனவும், தேசிய அரசியலை நோக்காக கொண்டே செயற்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகரசபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நாவந்துறையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

கட்சி அரசியலுக்கு அப்பால், தேசத்தினுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையிலேயே தமிழரசுக்கட்சியின் வழியில் வந்தவர்களும், விடுதலைப் போராட்டத்தின் வழியில் வந்தவர்களும் இன்று ஒரே அணியில் இணைந்திருப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் யாழ்ப்பாண மாநகர சபைத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் அக்கட்சியின் தலைவர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Leave a comment