பத்து வருடங்களின் பின் மன்னார் மீனவரின் வலையில் சிக்கிய இராட்சத மீன்!!

226 0

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இன்றைய தினம் மீனவரொருவருக்கு யானை திருக்கை எனப்படும் இராட்சத திருக்கை மீனொன்று சிக்கியுள்ளது.இராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடாவின் ஆழ்கடல் பகுதி வரையில் சென்று மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மீனவரொருவர் விசைப்படகில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துள்ளார்.இதன்போதே, சுமார் இரண்டு டொன் நிறையுடையுடைய இந்த மீன் அவருக்கு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், குறித்த மீனானது சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின் அந்த கடல் பகுதியில் சிக்கியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment