ஆளுநர் அலுவலகத்துக்கு பின்பக்க வாசலால் அழைத்துச் செல்லப்பட்டார்

288 0

625.0.560.320.160.600.053.800.668.160.90-67இன்று(2) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பயணம் செய்த பான்கிமூன், வடக்கு மாகாண ஆளுநரைச் சந்திப்பதற்காக ஆளுநர் அலுவலகத்திற்கு பின்பக்க வாசலால் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஐநா செயலர் பான்கிமூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு பாதுகாப்பு வழங்கும் நிமித்தம் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, மக்களின் போராட்டத்தை ஐநா செயலரின் பார்வையிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்காகவே பின்பக்க வாசலால் அழைத்துச் செல்லப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களால் ஐநா செயலருக்கு வழங்கப்பட்ட மகஜர் அவரது உயரதிகாரியிடம் வழங்கப்பட்டது.