ரவி கருணாநாயக்கவின் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிப்பு

186 0

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் விஷேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சபாநாயகரிடம் அனுமதி கோரியிருந்தார்.

பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாகவே அவர் விஷேட உரை நிகழ்த்துவதற்காக அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment