பீபா உலகக் கிண்ணம் பொதுமக்களின் பார்வைக்காக இன்று இலங்கைக்கு!!

253 0

உலகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ள 2018 உலக உதைபந்தாட்டக் கிண்ணம் [FIFA WORLD CUP 2018 ] நேற்றிரவு இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது. பிரதமர் ரணில்விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை மக்கள் பார்வைக்காக உதைபந்தாட்டக் கிண்ணம் வைக்கப்படும்.

உதைபந்தாட்ட கிண்ணத்தின் பவனி கடந்த வருடம் செப்ரெம்பர் 9ம் திகதி ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் இருந்து ஆரம்பமானது. மீண்டும் எதிர்வரும் மேமாதம் இந்தக் கிண்ணம் ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி ஜுன் மாதம் 15ம் திகதி முதல் ஜுலை 15ம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment