பெஷாவரில் பயங்கரவாத தாக்குதல் – 4 பேர் பலி

294 0

Tamil_News_large_1598551_318_219பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள கிறிஸ்டியன் காலனி பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.கிறிஸ்டியன் காலனி பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டுள்ளனர். இதனை தடுக்க பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் மற்றும் ஒரு பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால் அப்பகுதியில் மேலும் பல பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.