மண்டைத் தீவு கடலில் மிதந்து வந்த மர்மப் பெட்டி

321 0

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடலில் மிதந்து வந்த சந்தேகத்திற்கு இடமான மரப் பெட்டியொன்று இன்று மாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரப் பலகையினாலான பெட்டியில் ஆயுதங்கள் காணப்படலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடலில் மிதந்து வந்த இப்பெட்டி தொடர்பாக மீனவர்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த மர்மப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மர்ம பெட்டி தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment