தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

233 0

கல்முனை நகரில் தனியார் பஸ் நிலையத்தை ஏற்படுத்தி தருமாறும், இணைந்த சேவையை உறுதிப்படுத்துமாறும் கோரி இன்று (16) தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

கல்முனை நகரிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் நிலைய பகுதியில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் கோஷங்கள் எழுப்பியதை அவதானிக்க முடிந்தது.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்த பணிப்பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

Leave a comment