சுயாட்­சி­யு­டன் கூடியதுமான ஒரு நிரந்­த­ரத் தீர்வு இந்த ஆண்டு காணப்­ப­ட­ வேண்­டும்!

290 0

நீண்­ட­கா­ல­மா­கப் புரை­யோ­டிய புண்­ணா­கக் கரு­தப்­ப­டு­கின்ற தேசிய இனப் பிரச்­சி­னைக்கு உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையை அங்­கீ­க­ரிக்­கக் கூடி­ய­தா­க­வும் சுயாட்­சி­யு­டன் கூடியதுமான ஒரு நிரந்­த­ரத் தீர்வு இந்த ஆண்டு காணப்­ப­ட­ வேண்­டும்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரும், எதிர்­க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார். தைத்­தி­ரு­நாளை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள வாழ்த்­துச் செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.

அதில் அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது

இந்­துமா கட­லின் முத்­தென விளங்­கும் இலங்­கைத் திரு­நாட்­டில் வாழும் தமிழ் மக்­க­ளுக்­கும், புலம்­பெ­யர்ந்து உல­கெங்­கும் பரந்து வாழும் எம் உற­வு­க­ளுக்­கும் தைப்­பொங்­கல் இனிய நல்­வாழ்த்­துக்­க­ளைத் தெரி­விப்­ப­தில் மன மகிழ்­வெய்­து­கின்­றேன்.

இன்று, தமிழ்­கூ­றும் நல்­லு­ல­கம் எங்­கும் தமி­ழர் திரு­நாள், உழ­வர் பெரு­நாள் எனப் பெரு­மைப்­ப­டும் தைத்­தி­ரு­நாள் உவ­கை­யு­டன் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. இப்­பூ­வு­ல­கில் பருவ காலங்­கள் மாறி மாறி வரு­கின்­றன. அத்­த­கைய மாற்­றங்­க­ளுக்கு சூரிய பக­வானே கார­ணி­யா­கின்­றார்.

அந்த வகை­யில் மாறி­வ­ரும் மாரி காலத்­தில் கிடைக்­கின்ற மழை­வீழ்ச்­சி­யின் போது விதைக்­கப்­ப­டு­கின்ற பயிர் வகை­கள் வளர்ந்து, முற்றி தைமாத ஆரம்­பத்­தில் அறு­வ­டைக்­குத் தயா­ரா­கின்­றன. எமது பாவ­னைக்­கான உண­வுப் பொருள்­களை உற்­பத்தி செய்ய உத­வி­டும் சூரிய பக­வா­னுக்கு நன்றி பாராட்­டும் திரு­நா­ளா­கவே தைப்­பொங்­கல் பெரு­நாள் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது.

தைமா­தம் பிறக்­கின்­றது என்­றாலே மக்­கள் மனங்­க­ளில் பெரும் எதிர்­பார்ப்­புக்­க­ளும் துளிர்­வி­டத் தொடங்கி விடு­வ­துண்டு. எமது மக்­க­ளது மனங்­க­ளில் நீண்­ட­கால எதிர்­பார்ப்­பாக இருப்­பது, தேசி­யப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வே­யா­கும். அந்த வகை­யில், நீண்­ட­கா­ல­மா­கப் புரை­யோ­டிய புண்­ணா­கக் கரு­தப்­ப­டு­கின்ற எமது தேசி­யப்­பி­ரச்­சி­னைக்கு, புதிய அர­ச­மைப்­பின் ஊடா­கத் தீர்­வைக் காண்­ப­தற்­கான முன்­மு­யற்­சி­கள் கடந்த ஆண்­டில் மேற்­கொள்­ளப்­பட்டு எமது பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டிய பல அம்­சங்­களை உள்­ள­டக்­கி­ய­தான அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்­டில், தாம­த­மின்றி அதற்­கான தொடர் நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு மேலும் சிறந்த சிபார்­சு­க­ளை­யும் உள்­ள­டக்கி, அனைத்து மக்­க­ள­தும் இறை­யாண்­மையை மதிக்­கக் கூடி­ய­தா­க­வும், அவர்­க­ளின் உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையை அங்­கீ­க­ரிக்­கக்­கூ­டி­ய­தா­க­வும், நீடித்து நிலைத்­தி­ருக்­கக்­கூ­டி­ய­து­மான சுயாட்­சி­யு­டன் கூடிய ஒரு நிரந்­த­ரத் தீர்­வைக் காண்­ப­தன் மூலம் இத­ய­சுத்­தி­யு­ட­னான புரிந்­து­ணர்­வை­யும் இன நல்­லி­ணக்­கத்­தை­யும் ஒற்­று­மை­யை­யும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு வழி­யேற்­பட வேண்­டு­மென இந் நன்­நா­ளில் இறை­வ­னைப் பிரார்த்­திக்­கின்­றேன்.

சாந்தி, சமா­தா­னத்­து­டன் கூடிய சௌபாக்­கி­ய­மிக்க நாடாக இந்­நாடு சிறந்­தோங்க, பிறக்­கும் தைத்­திங்­கள் வழி­கோ­லிட எல்­லாம் வல்ல இறை­ய­ருளை இறைஞ்­சு­வ­து­டன், எனது நல்­வாழ்த்­துக்­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­ளு­கின்­றேன்.– என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

Leave a comment