புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று இரவு புறக்கோட்டை – பெஸ்தியன் மாவத்தை பகுதியில் கஞ்சாவுடன் இவர் கைதுசெய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இவர் ஹபுதலை – கிரிமானகம பகுதியைச் சேர்ந்த ஒருவராகும்.
இவர் தனது ஆடையை பயன்படுத்தி தூக்கிட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதோடு, சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

