ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் வரலாம் – மஹிந்த

243 0

பினைமுறி மோசடி அறிக்கையில் வெளியான தகவல்கள் காரணமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு மரண அச்சுறுத்தல் வரக்கூடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்ட இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன இடம்பிடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி ஊழல் மோசடிகளுக்கு இடமளிப்பவரல்ல எனவும் அவர் நாட்டிற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு எனவும் அவரை பாதுகாப்பது அனைவரினதும் கடமை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment