விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த முயற்சி!

259 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றில் செய்தி ஆசிரியராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் பணியாற்றி வருகின்றார்.

இன்று பிற்பகல் குறித்த அலுவலகத்திற்குள் நுழைந்த ஒருவர், அவரை கத்தியால் குத்த முயற்சித்த நிலையில் சக ஊழியர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

எனினும் கத்தி குத்து தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்த நபர் தப்பிச்செல்ல முட்பட்ட போது, அவரை மடக்கிப்பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸில் ஒப்படைப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கு எதிராக குறித்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தது.

இதையடுத்து சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டவிரோத கேபிள் இணைப்பை நடத்துவோரால் குறித்த தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டு இருக்கலாம் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment