சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

419 0

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 04 பேரை நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் கைது செய்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சட்டவிரோத மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரனங்களையும் பொகவந்தலாவ பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இன்று (05) வெள்ளிகிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜபடுத்தப்பட உள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment