ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி படுகொலை வழக்கு:மட்டு.மேல் நீதிமன்றில் பிள்ளையான் ஆஜர்!

347 0

பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணைகளுக்காக, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து, நாளை மற்றும் 8ஆம், 9ஆம் திகதிகளில் நான்கு அமர்வுகளாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது.இதன் முதல் நாள் அமர்வுக்காக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு பிள்ளையான் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment