என்னுடைய கட்சி தோல்வியடைந்தால் தமிழீழம் மலர்ந்தே தீரும்!

450 0

தன்னுடைய கட்சி தோல்­வி­ய­டை­யு­மா­னால் இலங்கை பிள­வு­பட்டு தமி­ழீ­ழம் மலர்­வதை எவ­ரா­லும் தடுத்­து­நி­றுத்த முடி­யா­மல்­போய்­வி­டும். தேசப்­பற்­றுள்ள ஒவ்­வொ­ரு­வ­ரும் தாமரை மொட்டுச் சின்­னத்­துக்கு வாக்­க­ளிக்­க­வேண்­டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறி­லங்கா பொது மக்­கள் முன்­ன­ணி­யின் மாநாடு சுக­த­தாச உள்­ளகவிளை­யாட்­ட­ரங்­கில் நேற்று மாலை நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இந்த அழைப்பை விடுத்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அரச பயங்­க­ர­வா­தத்­தின் அச்­சு­றுத்­தல், வர­லாறு காணாத ஊழல் குற்­றச்­சாட்­டுக்­கள், அரச சொத்­துக்­கள் விற்­பனை, அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் முடக்­கம் ஆகி­ய­வற்­றால் நாடு படு­பா­தா­ளத்தை நோக்­கிப் பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லை­யில்­தான் தேர்­த­லொன்­றுக்கு முகம்­கொ­டுத்­துள்­ளோம். கூட்டு எதி­ரணி கடு­மை­யா­கப் போரா­டி­ய­தா­லேயே தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய சந்­தர்ப்­ப­மும் உத­ய­மா­னது என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது.

2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி எமது சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி எமது கட்­சி­யின் செய­ல­ரி­னா­லேயே தோற்­க­டிக்­கப்­பட்­டா­லும் அர­சின் பெரிய மோச­டி­க­ளால் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு 60 நாள்­க­ளுக்­குள்­ளேயே புத்­து­யிர் பெற்­றோம்.

மத்­திய வங்­கிப் பிணை­முறி விவ­கா­ரம் தொடர்­பி­லான கோப் குழு­வின் அறிக்­கையை, அதன் முன்­னாள் தலை­வ­ரான டியு.குண­சே­கர நாடா­ளு­மன்­றில் சமர்ப்­பிக்­க­வி­ருந்த தரு­ணத்­தில்­தான் நாடா­ளு­மன்­ற­மும் கலைக்­கப்­பட்­டது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­கூட, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைக் காப்­பாற்­றவே நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­த­தா­கக் கூறி­யி­ருந்­தார்.

அர­சின் மோச­டி­யான செயற்­பா­டு­களை எதிர்ப்­போரை எம்­மு­டன் இணை­யு­மாறு அழைப்பு விடுத்­தோம். ஆனால், சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­களோ அமைச்­சுப் பத­விக்கு ஆசைப்­பட்டு எமது அழைப்பை நிரா­க­ரித்து, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கொள்­கை­யின்­கீழ் செயற்­பட்டு வரு­கின்­ற­னர்.

ஆட்­சிக்கு வந்­தே­னும் நாட்டை அபி­வி­ருத்­திப் பாதை­யில் இட்­டுச் செல்­வார்­கள் என்று பார்த்­தால் எம்­மால் செய்­யப்­பட்ட மத்­தள பன்­னாட்டு வானூர்தி நிலை­யம், அம்­பாந்­தோட்டை துறை­மு­கம் உள்­ளிட்ட அரச சொத்­துக்­களை எல்­லாம் வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்­தார்­கள். இப்­ப­டி­யான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கொள்­கை­க­ளுக்கு சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் அமைச்­சர்­க­ளும் தலை­ய­சைப்­பது எமக்­குக் கவ­லை­யாக இருக்­கி­றது.

நாடு தலை­கீ­ழாக மாறி­விட்­டது. தம்மை அதி­கா­ரத்­துக்கு கொண்­டு­வந்த அமெ­ரிக்­கா­வையே அரசு பகைத்­துக் கொண்­ட­தன் விளை­வா­கத்­தான் ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கை­யும் இல்­லா­மல் செய்­யப்­பட்­டது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எம்.ஏ.சுமந்­தி­ரன் வடக்­குக்­குச் சென்று, புதிய அர­ச­மைப்­பின் ஊடாக கூட்­டாட்சி உத­ய­மா­கும் என்­றும், பௌத்த தேரர்­களை ஏமாற்­று­வ­தற்­கா­கவே பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் பரப்­புரை செய்து வரு­கின்­றார். இந்த விட­யத்­தில்­கூட தமி­ழர்­க­ளுக்கு ஒன்­றை­யும் சிங்­க­ள­வர்­க­ளுக்கு ஒன்­றை­யுமே இந்த அரசு கூறி ஒட்­டு­மொத்த மக்­க­ளை­யும் ஏமாற்றி வரு­கின்­றது.

தாமரை மொட்­டுச் சின்­னத்­துக்கு வாக்­க­ளிப்­ப­தில்­தான் நாட்­டின் வெற்­றியே தங்­கி­யுள்­ளது. மாறாக, இந்­தச் சின்­னத்­தைத் தோற்­க­டித்­தோ­மே­யா­னால் நாடு பிள­வு­ப­டு­வதை எவ­ரா­லும் தடுத்­து­நி­றுத்­தவே முடி­யாது.

தற்­போது ஏற்­பட்­டுள்ள இந்த அமை­தி­யான சூழ­லா­னது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்­களை இழந்து இரா­ணு­வத்­தின் போராட்­டத்­தால் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட வெற்­றி­யா­கும். இதனை இல்­லா­தொ­ழிக்­கும் வகை­யி­லும் காட்­டிக்­கொ­டுக்­கும் வகை­யி­லும் எவ­ரும் வாக்­க­ளிக்­கக்­கூ­டாது என்­றும் நாம் கேட்­டுக்­கொள்­கி­றோம்.
அதே­நே­ரம்,

எனது ஒளிப்­ப­டத்­தைப் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பி­லும் தற்­போது ஒரு சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது. உண்­மை­யில் இது மகிழ்ச்­சியே. நான் யாரை­யும் பயன்­ப­டுத்த வேண்­டாம் என்று கூற­வே­மாட்­டேன். எனது ஒளிப்­ப­டத்தை யார் வேண்­டு­மா­னா­லும் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.

ஆனால், தாமரை மொட்­டுச் சின்­னத்­துக்கே எனது ஒளிப்­ப­டம் உரித்­தா­னது என்­பதை நான் இந்த வேளை­யில் பதிவு செய்­துக் கொள்­கி­றேன் – என்­றார். சிறிது நேரம் தமிழ் மொழி­யி­லும் அவர் உரை­யாற்­றி­னார்.

Leave a comment