தாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்

4755 0

தாய்லாந்தில் நிதி நிறுவனங்களை தொடங்கி பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 13,275 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்தில் தலைநகர் பாங்காங்கை சேர்ந்தவர் புதிட் கிட்டிகிராடிலோக் (34). இவர் நிதி நிறுவனங்கள் நடத்தினார். அதில் பணம் செலுத்துபவர்களுக்கு அதிக அளவில் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்தார்.

அதை நம்பி ஏராளமானவர்கள் அதில் பணம் செலுத்தினர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை திரும்ப வழங்கவில்லை. அதன்மூலம் 40 ஆயிரம் பேரிடம் ரூ.1200 கோடி பணம் மோசடி செய்தார்.

இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. புதிட் மீது 2,653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 13,275 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும், புகார் செய்த 2,653 பேருக்கு ரூ.170 கோடி பணத்தை திருப்பி வழங்கவும் உத்தரவிட்டது. புதிட்டின் 2 நிறுவனங்களுக்கு தலா ரூ.130 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a comment