அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார்

292 0

அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார் என்று வன்னி பாரா­ளுமன்ற உறுப்­பினர் ந.சிவ­சக்தி ஆனந் தன் தெரி­வித்தார்

வவு­னியா நக­ர­ச­பைக்­காக உதய சூரி­யன்­சின்­னத்தில் குடி­யி­ருப்பு வட்­டா­ரத்தில் போட்டியிடும் இ.கௌத­மனை ஆத­ரித்து நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரி­வித்த அவர்,

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் ரெலோவும் புளொட்டும் இணைந்து போட்­டி­யிடும் கடைசி தேர்தல் இதுதான். ஏதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் மாகா­ண­சபை தேர்தல் நடை­பெற இருக்­கின்­றது. இதில் முத­ல­மைச்சர் ஒரு பக்­கமும் மாவை­சே­னா­தி­ராஜா இன்­னொ­ரு­பக்­க­மு­மாக போட்­டி­யி­டு­வார்கள். இதில் நிச்­ச­ய­மாக மாவை சேனா­தி­ராஜா வெல்­லப்­போ­வ­தில்லை.

மீண்டும் தற்­போ­தைய முத­ல­மைச்­சரே வெல்­லுவார். மாகா­ண­சபை தேர்­தலில் முத­ல­மைச்சர் தனித்து நிற்­கப்­போ­வதும் இல்லை. ஆனால் பொதுச்­சின்­னத்­திலோ சைக்கிள் சின்­னத்­திலோ போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை அவர் உதய சூரியன் சின்­னத்­தி­லேயே போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­மாக உள்­ளது.

இதே­வேளை அர­சாங்­கத்­துடன் பேசி செய்­யக்­கூ­டிய சின்­னச்­சின்ன காரி­யத்தை கூட எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்து சம்­பந்தன் அவர்கள் செய்­ய­வில்லை. காணாமல் போனோர் விட­யம் அர­சியல் கைதிகள் விட­யம் கேப்­பா­பி­லவு காணி விடயம் உட்­பட மக்­களின் பல்­வேறு விட­யங்­களை அர­சுடன் கலந்­து­பேசி தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத எதிர்க்­கட்சி தலை­வ­ரா­கவே இவர் இருக்­கின்றார். ஆனால் தமக்கு தேவை­யான மாவட்ட அபி­வி­ருத்தி குழு பதவி வீடு வாசல் பங்­களா தமக்கு தேவை­யான சலு­கை­களை பெற்­றுக்­கொண்­டார்­களே தவிர தேர்­தலில் வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு உருப்­ப­டி­யாக ஒரு காரி­யமும் செய்­ய­வில்லை. எதிர்க்­கட்சி தலை­வ­ராக சம்­மந்தன் இருந்தால் கூட உண்­மை­யா­கவே அவர் எதிர்க்­கட்சி தலைவர் இல்லை. நாம் கண்ட அமிர்­த­லிங்கம் போன்ற ஒரு எதிர்க்­கட்சி தலை­வரை போன்று தமிழர் மத்­தியில் ஒரு எதிர்க்­கட்சி தலைவர் இல்லை. அமிர்­த­லிங்கம் அவர்கள் ஒரு நாட்­டிற்கு விஜயம் செய்தால் ஒரு நாட்டின் அதி­ப­ருக்கு கொடுக்­கப்­படும் மரி­யா­தைதான் அங்கு கொடுக்­கப்­பட்­டது. ஆனால் இன்­றைய எங்­க­ளது எதிர் கட்சி தலைவர் பத­வி­யா­னது ஜனா­தி­ப­தி­யினால் ஒரு சன்­மா­ன­மா­கவே வழங்­கப்­பட்­டது.

இது மாத்­தி­ர­மன்றி பாரா­ளு­மன்­றத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களில் என்னை தவிர ஏனைய 15 பேருக்கும் 2 கோடி ரூபா பிர­தம மந்­தி­ரியின் அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடாக அபி­வி­ருத்தி திட்டம் என்ற பேரில் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னிறுத்தி மக்களிடம் வாக்கை கேட்டு விட்டு இரண்டரை வருடங்களாக அற்ப சலுகைகளுக்காக பின்னால் நிற்கிறார்கள் கூட்டமைப்பினர் எனவே மக்கள் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a comment