தபால் மூல வாக்­கா­ளர்­க­ளுக்­கான வாக்­குச்­சீட்­டுக்கள் அனுப்­பி­வைக்க நட­வ­டிக்கை.!

373 0

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு எதிர்­வரும் ஜன­வரி மாதம் 25ஆம், 26ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஜன­வரி 11ஆம் திகதி முதல் தபால் மூல வாக்­க­ாளர்­க­ளுக்­கான வாக்குச் சீட்­டுக்­களை அனுப்­பி­வைப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டவுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் மேல­திக தேர்­தல்கள் ஆணை­யாளர் எம்.எம்.மொஹமட் தெரி­வித்தார்.

இவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தபால் மூல­மாக வாக்­க­ளிப்­ப­வர்­க­ளி­டத்­தி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்­றுள்ள விண்­ணப் ­பங்­களை பரி­சீ­லனைக்­குட்­ப­டுத்தி எதிர்­வரும் ஜன­வரி மாதம் 8 ஆம், 9 ஆம் திக­தி­களில் தபால் மூல வாக்­காளர் இடாப்பு அத்­தாட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இத­னை­ய­டுத்து ஜன­வரி மாதம் 11ஆம் திகதி குறித்த வாக்­காளர் இடாப்பில் உள்ள அனைத்து தபால் மூல வாக்­க­ாளர்­க­ளுக்­கு­மான வாக்குச்சீட்­டுக்கள் அனைத்தும் தபால் அலுவலகங் களில் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இத­னை­ய­டுத்து தபால் மூல­மாக வாக்­க­ளிக்கத் தகு­தி­பெற்­ற­வர்கள் அனை­வரும் 25ஆம், 26ஆம் திக­தி­களில் தமது அலு­வ­லகங்­களில் வாக்­க­ளிப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் அனைத்தும் தயா­ராக இருக்கும். இதன்­போது தேர்தல் திணைக்­கள அதி­கா­ரி­களும், மாவட்ட தெரி­வத்­தாட்சி அலு­வ­லக அதி­கா­ரி­களும் காண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளிலும், பொலிஸார், படையினர் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபடவுள்ளனர். ஆகவே இத்தகைய பணிகளில் ஈடுபடுபவர்கள் 22 ஆம் திகதி தபால்மூலமாக தமது வாக்கு களை அளிக்க முடியும் என்றார்.

Leave a comment