களனி தொகுதி ஐ.தே.க செயற்பாட்டாளர்கள் சுதந்திரக் கட்சியில் இணைவு

244 0

களனி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் இன்று (26) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்து ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான கனிஷ்க சமரசிங்க, நோபட் பெரேரா மற்றும் பேலியகொட நகரசபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் பெரேரா உள்ளிட்ட நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட செயற்பாட்டாளர்கள் இதில்
உள்ளடங்குகின்றனர்.

பேலியகொட ரோஹன விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ஊராப்பொல பிரேமசிறி நாயக்க தேரர் மற்றும் களனி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் திலக் வராகொடவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Leave a comment