“தல பூட்டுவா” கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

242 0

கல்கமுவே “தல பூட்டுவா” யானையை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் மஹவை மேலதிக நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் ரசிக மல்லவாரச்சி மூலம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கொலைக்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியை அரசாங்க இரசாயன பரிசோதகருக்கும் கொலை செய்யப்பட யானையின் சதை பகுதியை டீ.என்.ஏ. பரிசோதனைக்காக பொரளை ஜீன்டெக் நிறுவனத்திற்கும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை இரகசிய பொலிஸாருக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தொடர்பாடல் நிறுவனகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment