சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை-சாகல

238 0

இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பொலிஸ் பிரிவிற்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment