மத்திய வங்கி நிதி மோசடி அறிக்கை கிடைத்தவுடன் தகுந்த தண்டனை – ஸ்ரீ ல.சு.க.

196 0

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பர் என ஸ்ரீ ல.சு.க.யின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கூட்டரசாங்கம் செய்தாலும் யாராவது தவறு செய்தால், அது தொடர்பில் தேடிக் கண்டறிவதற்கு ஜனாதிபதி பின்னிற்கப் போவதில்லையெனவும், ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு சிறந்த உதாரணம் ஆகும்.

ஐ.தே.க.யைப் பாதுகாக்கும் தேவை ஜனாதிபதிக்குக் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment