சக்திவாய்ந்த 18 கைக்குண்டுகள் மீட்பு

220 0

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவில் விசேட அதிரடிப் படையினரால் சக்திவாய்ந்த 18 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி அதிரடிப்படை முகாம் கட்டளை அதிகாரி ஐ.பி. ஜெயகெழும் தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேசத்திலுள்ள பாவற்கொடிச்சேனை காட்டுப் பிரதேசத்தில் இன்று பிற்பகல் மேற்படி கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் இவை விடுதலைப் புலிகளின் காலத்தில் மண்ணில் புதைத்து வைத்திருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக் குண்டுகள் மீட்கப்பட்டது தொடர்பில் மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அறிவித்து அதனை நீதிமன்ற உத்தரவுக்கமைவாக செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைளை தாம் மேற்கொண்டுவருவதாகவும் விசேட அதிதிரடிப் படையினரால் தெரிவிக்கப்பட்டது

Leave a comment