அ.தி.மு.க. அணிகளுக்கு டெபாசிட் கிடைக்காது: மு.க.ஸ்டாலின்

205 0

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. அணிகளுக்கு டெபாசிட் கிடைக்காது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. அணிகளுக்கு டெபாசிட் கிடைக்காது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் இரு அணியினரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்ததால் மட்டும் அவர்களால் வெற்றி பெற முடியாது.

வாக்காளர்களுக்கு கோடி கோடியாக செலவு செய்தாலும் அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாட்ஸ்-அப் மூலம் பிரசாரம் செய்தார். அதில் அவர் கூறியதாவது:-

கொளத்தூர் தொகுதி எனது செல்லப்பிள்ளை. ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றால் அதை எனது வளர்ப்பு பிள்ளையாக கருதி வளர்ச்சி பணிகளை செய்வேன்.

அ.தி.மு.க. அரசை மாற்றுவதற்கு தொடக்கப் புள்ளியாக ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அமையட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment