சாவகச்சேரி நகர சபையைக் கைப்பற்ற 09 கட்சிகள் களத்தில் !

221 0

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபை தேர்தலிற்காக 9 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையினில் அந்த 9 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலருமான நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தலிற்காக நேற்று முன்தினம் ஈபிடிபி தமது வேட்பு மனுவினை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் சம்ர்பித்திருந்து.

நேற்றும் மூன்று அரசியல் கட்சிகள் தமது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்திருந்தன. இதில் ஐக்கிய சோசலிசக் கட்சி , அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவே நேற்று தமது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்திருந்தன.

இன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி , சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐந்து கட்சிகள் இன்றைய தினம் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தன.

யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி நகர சபைக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதித் தினம் இன்று நண்பகலுடன் முடிவடைந்த நிலையில் எல்லாமுமாக 9 தரப்புக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யப்பட்டு அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a comment