போதைப்பொருள் பாவனையை தடுக்க பாடசாலை மட்டத்தில் வேலைத்திட்டம்

240 0

எதிர்கால சந்ததியை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக பாடசாலை சமூகத்தில் மாத்திரமன்றி வெளித்தரப்புகளினதும் தலையீடு மிகவும் அவசியம் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து உளவுப் பிரிவு தகவல்களையும், பாடசாலை சமூகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துவருவதாக கூறினார்.

பாடசாலை மட்டத்தில் நிறுவப்படும் குழுக்கள் ஊடாகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Leave a comment