இறந்த நிலையில் மற்றுமோர் யானை கண்டுபிடிப்பு

253 0

அநுராதபுரம் திறப்பனை தெமடேகம பிரதேசத்தில் இறந்த நிலையில் காட்டு யானை ஒன்றினது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த உடல் மீட்கப்பட்டதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்டு யானை ஒன்றின் உடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment