இராணுவத்தின் புதிய ஊடாகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தபத்து!

234 0

இராணுவத்தின் புதிய ஊடாகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இவ்வாறு இராணுவ ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இராணுவ ஊடகப் பேச்சாளராக  கடமையாற்றி வரும் மேஜர் ஜெனரால் ரொஷான் செனவிரத்ன 51 ஆம் படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஏற்படும் வெற்றிடத்துக்கு பிரிகேடியர் சுமித் அத்தபத்து இவ்வாறு ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

52 ஆவது இராணுவ படையணியின் பிரிகேடியராக இதுவரை சுமித் அத்தபத்து கடமையாற்றி வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment