தேசிய விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சற்று முன்னர் சந்தித்துள்ளனர்.
இதற்கமைய, இவர்கள் இருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ளதாக, தெரியவந்துள்ளது.
தேசிய விடுதலை முன்னணியின் பிரதித் தலைவராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க மற்றும் அக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேயநாயக்க ஆகியோரே இவ்வாறு சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்துள்ளனர்.