ரயில்வே ஊழியர்கள் கேட்டதைக் கொடுத்தால் எமக்கும் தேவை- சுகாதார தொழிற்சங்கம்

534 0

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் அதிகரித்தால், அந்த சம்பள அதிகரிப்பை சுகாதாரத் துறையிலுள்ள பிரிவுகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய அறிவித்துள்ளார்.

ரயில்வே ஊழியர்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் நடவடிக்கையினால் பொதுமக்கள் படும் சிரமங்களுக்கு அளவில்லை. இதுபோதாமைக்கு சுகாதாரத் துறையும் இவ்வாறான அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை அரசாங்கத்துக்கு நெருக்கடியாகவே அமையும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாகும்.

Leave a comment