அம்மாவின் உண்மை விசுவாசி மதுசூதனனை வெற்ற பெற செய்யுங்கள்: அமைச்சர் காமராஜ்

451 0

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து அமைச்சர் காமராஜ் பிரசாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். அரசின் சாதனைகளை விளக்கி கூறி பொதுமக்களிடம் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமைச்சர் காமராஜ், கழ இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். கடைசி கால சியோன் சபை தேவாலயத்தில் கிறிஸ்தவர்களிடம் அமைச்சர்கள் காமராஜ், கே.பி.அன்பழகன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து பூண்டி தங்கம்மாள் தெரு, நாகூரான் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் காமராஜ் வீடு வீடாக சென்று பெண்களிடம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மண்ணின் மைந்தன், உங்கள் வீட்டுப்பிள்ளை அம்மாவின் உண்மை விசுவாசியான அண்ணன் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

மதுசூதனனை தேர்ந்தெடுத்தால் தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை பெற்று தருவார். எனவே அவரை வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அமைச்சருடன் கழக இணை ஒருங்கினைப்பாளர் கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ஜி.வெங்கடேஷ், பாபு எம்.பி., வடசென்னை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் உடன் செனறு ஆதரவு திரட்டினர்.

Leave a comment