உடன்பாடு இன்றேல் தனித்துப் போட்டி- அமைச்சர் மனோ

1558 0

தமக்கு சின்னம் முக்கியம் இல்லையெனவும், எண்ணம் தான் முக்கியம் எனவும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணிக்கு ஒரு உடன்பாடு காணப்படாவிடின் தாம் தனித்துப் போட்டியிடுவோம் எனவும் மஸ்கெலிய நகரில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment