கம்பஹாவில் எச்.ஐ.வி. தொற்றிய சந்தேகத்திற்கிடமான ஐவர்

326 0

எய்ட்ஸ் நோய் ஒழிப்புப் பிரிவினால் கம்பஹா ரயில் நிலைய பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனை நடவடிக்கையின் பின்னர் எச்.ஐ.வீ.தொற்றாளர்கள் எனக் கருதப்படும் ஐவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் எய்ட்ஸை ஒழிப்போம், இரத்தப் பரிசோதனையில் அனைவரையும் உள்வாங்குவோம் எனும் தொனிப்பொருளில் இரத்தப் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கம்பஹாவில் மாத்திரம் கடந்த மூன்று தினங்களில் சுமார் 160 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் இதில் ஐவர் சந்தேகத்திற்கிடமானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்களில்  மூவர் ஆண்கள் ஆவர்.

இவ்வாறு இனம்காணப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் வைத்தியசாலைக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களிடம் மேலும் பரிசோதனைகள் எச்.ஐ.வி. தொற்று உறுதிப்படுத்தப்படின் அவசியமான சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment